விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் பொங்கல் விழா!
ADDED :4335 days ago
விருதுநகர்: விருதுநகர் மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா நடந்தது. விருதுநகரில் பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனித்திருவிழாவையொட்டி நேற்ற ஊஞ்சலில் சிறப்பு அலங்காரத்தில் பராசக்தி மாரியம்மன் மற்றும் வெயிலுக்காத்தம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து பொங்கல் வைக்கும் நிகழ்ச்சிநடந்தது. விழாவில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.