உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனந்தமலை முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை

ஆனந்தமலை முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை

ஊட்டி : ஊட்டி எம்.பாலாடா கீழ்அப்புக்கோடு ஆனந்தமலை முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை, மாதாந்திர பூஜை நடந்தது. காலை 10:00 மணிக்கு சித்திசெல்வ விநாயகர், ஆனந்தமலை முருகன், ஏழுஹெத்தையம்மன், நவக்கிரகங்களுக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்புபூஜை நடந்தது. தொடர்ந்து சந்திரன் குழுவினரின் பஜனை, தஞ்சை அருளாளர் ஆனந்தசித்தரின் அருளுரை, ராஜூபெட்டன், பெள்ளன் ஆகியோரின் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் ராமச்சந்திரன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !