திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பிரம்மோற்சவ விழாவில் இன்று..!
ADDED :4393 days ago
திருவல்லிக்கேணி: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில், பிரம்மோற்சவ இரண்டாம் திருநாளான நேற்று காலை, சுவாமி, சேஷ வாகனத்தில் வீதியுலா வந்தார். நேற்று இரவு சிம்ம வாகனத்தில் வீதியுலா நடந்தது. இன்று அதிகாலை, 5.30 மணிக்கு கருட சேவை சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று இரவு, 8.00 மணிக்கு, அன்னவாகன வீதியுலாவும் நடக்க உள்ளன.