வடமதுரை அருகே மழை வேண்டி வழிபாடு
ADDED :4375 days ago
வடமதுரை : வடமதுரை அருகே மழை பெய்ய வேண்டி வேலாயும்பாளையம் கிராம மக்கள் ஒன்று கூடி சிறப்பு வழிபாடு நடத்தினர். வேலாயுதம்பாளையம் அருகிலுள்ள ஊற்றாங்கரைக்கு ஊர்வலமாக மக்கள் சென்றனர். அங்குள்ள கோயில் வளாகத்தில் ஏழு சப்தகன்னிமார் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும், பொங்கலிட்டு, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடத்தினர்.