உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்தாலவாழி அம்மன் கோவிலில் சாகை வார்த்தல்!

முத்தாலவாழி அம்மன் கோவிலில் சாகை வார்த்தல்!

விழுப்புரம்: ராகவன்பேட்டை முத்தாலவாழியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் திருவிழா நடந்தது. ராகவன்பேட்டை முத்தாலவாழியம்மன் கோவிலில் வரும் 16ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது. இதை யொட்டி கோவிலில் முதல் நாள் திருவிழாவாக நேற்று காலை 11:00 மணிக்கு சாகை வார்த்தல் துவங்கியது. தினமும் இரவு 8:00 மணிக்கு சுவாமி வீதியுலா, 16ம் தேதி காலை 6:00 மணிக்கு முத்தாலவாழியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடக்கிறது. பின்னர் மாலை 4 மணிக்கு தேர் திருவிழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அப்பகுதி பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !