தட்சிணாமூர்த்திக்கு பாலாபிஷேகம்!
ADDED :4164 days ago
திருவள்ளூர் : பூங்கா நகரில் உள்ள, யோக ஞான தட்சிணாமூர்த்தி கோவிலில், நேற்று, 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. காக்களூர் அடுத்த, பூங்கா நகரில் யோக ஞான தட்சிணாமூர்த்தி கோவில் உள்ளது. இக்கோவிலில் வியாழக்கிழமை தோறும், யோக ஞான தட்சிணாமூர்த்திக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெறும். நேற்று காலை, 9:30 மணிக்கு அபிஷேகம் துவங்கியது. பாலாபிஷேகம் முடிந்ததும், தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. இந்நிகழ்ச்சியில், திருவள்ளூர், காக்களூர், பூங்கா நகர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.