மாகாளியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா!
ADDED :4157 days ago
அன்னுார் : கவுண்டம்பாளையம் மாகாளியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா நடந்தது. மாகாளியம்மன் கோவில் ஏழாம் ஆண்டு பூச்சாட்டு திருவிழா கடந்த வாரம் துவங்கியது. வெள்ளிக்கிழமை அம்மன் சிலை எடுத்து வரப்பட்டது. திங்கட்கிழமை கணபதி ஹோமம் நடந்தது. செவ்வாயன்று மதியம் சிங்க வாகனம் எடுத்து வருதலும், இரவு பக்தர்கள் அணிக்கூடை எடுத்து வருதல் நடந்தது. புதனன்று அதிகாலையில் சக்தி கரகம் எடுத்து வருதல், அம்மன் அழைப்பு, சுவாமி திருக்கல்யாண உற்சவம், அலங்கார பூஜை நடந்தது. பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.