தேவகோட்டையிலிருந்து குன்றக்குடிக்கு காவடி!
ADDED :4270 days ago
தேவகோட்டை : வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, தேவகோட்டையிலிருந்து குன்றக்குடிக்கு பக்தர்கள் காவடிதூக்கி சென்றனர். நகர் பள்ளியில் காவடி கட்டப்பட்டு சிறப்பு பூஜைக்குப் பிறகு நகர் வலம் வந்தது. நேற்று சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயிலில் காவடிகளுக்கு பூஜை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பக்தர்கள் காவடிகளை ஏந்தி குன்றக்குடி சென்றனர்.