மயிலத்தில் கிருத்திகை விழா
ADDED :4147 days ago
மயிலம்: மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் கோவிலில் வைகாசி மாத கிருத்திகை விழா நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடந்தது. காலை 11 மணிக்கு கோவில் வளாகத்திலுள்ள பாலசித்தர், வினாயகர் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பகல் 12 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு வழிபாடு, மகா தீபாராதனை நடந்தது. பின்னர் மூலவர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிற்பகல் 1 மணிக்கு கோவில் மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 9 மணிக்கு சிறப்பு மலர் அலங்காரத்துடன், உற்சவர் கிரிவலம் நடந்தது. விழா ஏற்பாடுகளை மயிலம் ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.