உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் நாளை வைகாசி விசாகவிழா கொடியேற்றம்!

பழநியில் நாளை வைகாசி விசாகவிழா கொடியேற்றம்!

பழநி:வைகாசி விசாகவிழாவை முன்னிட்டு, பழநி பெரியநாயகியம்மன் கோயிலில், நாளை கொடியேற்றம் நடக்கிறது. தைப்பூசம், பங்குனி உத்திரவிழாவிற்கு, அடுத்தப்படியாக, பழநி வைகாசிவிசாக விழாவில், பெரியநாயகியம்மன் கோயிலில், நாளை காலை 8.30 முதல் 9.30 மணிக்குள் கொடியேற்றப்படுகிறது. தொடர்ந்து ஜூன் 5முதல் 14 வரை விழா நடக்கிறது. விழா நாட்களில் சுவாமி தங்கமயில், வெள்ளி காமதேனு, தங்ககுதிரை உள்ளிட்ட வாகனங்களில், முத்துகுமாரசுவாமி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, ஆறாம் நாளான ஜூன் 10 ல், மாலை6.30 மணிக்குமேல், முத்துக்குமாரசுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணமும்,ஏழாம்நாள் ஜூன் 11ல், வைகாசி விசாகத்தன்று, பெரியநாயகியம்மன் கோயில் தேர்நிலையிருந்து மாலை 4.30 மணிக்குமேல் புறப்பாடாகி, நான்கு ரத வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது. அன்றைய தினம் மலைக்கோயில் சன்னதி அதிகாலை 4 மணி திறக்கப்படும். விழா ஏற்பாடுகளை பழநி கோயில் நிர்வாகத்தினர் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !