உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலம் கோவில்களில் பிரதோஷ வழிபாடு!

மயிலம் கோவில்களில் பிரதோஷ வழிபாடு!

மயிலம்: மயிலம் கோவில்களில்   பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. கொல்லியங்குணம்  சிவன் கோவிலில் சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது.  சிவபெருமானுக்கு மாலை 6 மணிக்கு  சிறப்பு அபிஷேகம் நடந்தது.பின்னர் சுவாமிக்கு மகா தீபாராதனை, வழிபாடு நடந்தது. ஆலகிராமம் எமதண்டீஸ்வர் கோவிலில் சுவாமிக்கு நேற்று மாலை  சிறப்பு வழிபாடு மகா அபிஷேகம் நடந்தது. இரவு 7 மணிக்கு திரிபுரசுந்தரிக்கு அபிஷேகம் நடந்தது.  பாதிராப்புலியூரில் சிவன் கோவிலில்  நேற்று பிரதோஷத்தை  முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் வழிபாடுகள் நடந்தது. இரவு 7  மணிக்கு நடந்த தீபாராதனையில்  பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி  தரிசனம் செய்தனர். மயிலம் சுந்தர விநாயகர் கோவிலில் சுவாமிக்கு அலங்காரம் செய்திருந்தனர்.  மாலை 6 மணிக்கு நடந்த சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !