இறைவனே வணங்கும் ஆறு பேர் யார்!
ADDED :4258 days ago
நான் ஆறுபேரை வணங்குகிறேன் என்று கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார். யார் அந்த ஆறு பேர் தெரியுமா?.. ப்ராதஸ்நாதி (அதிகாலையில் குளிப்பவர்). அச்வத்வசேவி (அரசமரத்தை வணங்குபவர்). த்ருணாக்னிஹோத்ரி (மூன்று தீயை இடையறாது வளர்ப்பவன்). நித்யான்னதாதா (நாள்தோறும் ஏழைகளுக்கு உணவளிப்பவன்). சதாபிஷேகி (நூற்றாண்டு விழா செய்துகொண்டவர்). பிரம்மஞானி (இறைவனை உணர்ந்தவர்) ஆகியவர்களை இறைவனே வணங்குவதாக கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார்.