திருக்கோவிலூர் பாலசுப்ரமணியர் கோவிலில் கிருத்திகை விழா!!
ADDED :4125 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர், பாலசுப்ரமணியர் கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 7 மணிக்கு மூலவர் வள்ளிதேவசேனா சமேத பாலசுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. 8 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை, அர்ச்சனை நடந்தது. மாலை 6 மணிக்கு வெள்ளிக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜை ஏற்பாடுகளை ராஜா குருக்கள் செய்தார். பக்தர்கள் பாலசுப்ரமணியரை வழிபட்டனர்.