உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சியில் பிரதோஷ வழிபாடு!

செஞ்சியில் பிரதோஷ வழிபாடு!

செஞ்சி: செஞ்சி பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. செஞ்சி காமாட்சியம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் காலையில் ஏகாம்பரேஸ்வரர், காமாட்சியம்மன், நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். மாலை 3 மணிக்கு நந்தீஸ்வரருக்கு பால் அபிஷேகம் நடந்தது. பெண்கள் அகல் விளக்கேற்றி வழிபட்டனர். முக்குணம் முக்குன்ற நாத உடையார் கோவிலில் முக்குன்ற நாதர் மற்றும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். மகா தீபாராதனையும், சுவாமி கோவில் உலாவும் நடந்தது. உபயதாரர் நல்லதம்பி, நிர்வாக குழுவினர் நிர்வாகிகள் பச்சைவண்ணன், செல்லக்குட்டி, பழனி, சண்முகம், நாராயணசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலச்சேரி பிரகன்நாயகி உடனுறை மத்தளேஸ்வரர் குடைவரை கோவிலில் மத்தளேஸ்வரர், பிரகன்நாயகி, நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. பூஜைகளை சிவநாதன் குருக்கள் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !