உளுந்தூர்பேட்டை பகுதியில் பிரதோஷ சிறப்பு அபிஷேகம்!
ADDED :4126 days ago
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை சுற்றியுள்ள சிவன் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடு நடந்தது. எலவனாசூர் கோட்டை கிராம அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் சித்திரை மாத பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடு நடந்தது. நேற்று முன்தினம் மாலை 4.30 மணி முதல் பால், தயிர், சந்தனம், விபூதி, பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந் தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சுவாமி காட்சியளித்தார். அதே போல் உளுந்தூர்பேட்டை கைலாசநாதர் சுவாமி கோவில், உளுந் தாண்டார்கோவில் மாஷபுரீஸ்வரர் சுவாமி கோவில், ஆதனுõர் அருணாசலேஸ்வரர் சுவாமி கோவில், திருநாவலுõர் மனோன்மணி உடனுறை பக்த ஜனேஸ்வரர் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடு நடந்தது. பிரதோஷத்தில் பெண்கள் விளக்கேற்றி வழி ப்பட்டனர்.