உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்மலையனூர் ஊஞ்சல் உற்சவம்: லட்சகணக்கான பக்தர்கள் தரிசனம்!

மேல்மலையனூர் ஊஞ்சல் உற்சவம்: லட்சகணக்கான பக்தர்கள் தரிசனம்!

செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தை காண லட்சகணக்கான பக்தர்கள் திரண்டனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு நேற்று இரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. காலையில் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து , வெள்ளிக்காப்பு அணிவித்தனர். இரவு 12 மணிக்கு  ஊஞ்சல் உற்சவத்தை துவக்கினர். சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளியதும், பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். தொடர்ந்து ஒரு மணிநேரம்  ஊஞ்சல் தாலாட்டு நடந்தது. இதில் அம்மன் பக்தி பாடல்களும், தாலாட்டு பாடல்களும் பாடினர். நூற்றக்கணக்கானவர்கள்  சாமி வந்து ஆடினர். இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், விழுப்புரம் ஆர்.டி.ஓ., பிருந்தா தேவி,   அறங்காவலர்கள் குழு தலைவர் சரவணன், மேலாளர் முனியப்பன் மற்றும் அறங்காவலர்கள் கலந்து கொண்டனர். செஞ்சி டி.எஸ்.பி., முரளிதரன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். இதில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சென்னை, புதுச்சேரி, வேலுõர், ஈரோடு, சேலம் உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !