உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரமலான் சிந்தனைகள்: பெற்றோருக்கு பணிவிடை!

ரமலான் சிந்தனைகள்: பெற்றோருக்கு பணிவிடை!

நல்லது எது, கெட்டது எது என்பது பற்றி சொல்கிறார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள். ஒருமுறை நாயகத்தின் தோழர் ஒருவர், திடகாத்திரமான உடலுடன் சாலையில் சென்று கொண்டிருந்தார். அவரைப் பார்த்த மற்ற தோழர்கள், ‘அண்ணலாரே! இவர் இந்த அளவு உடல்பலம் மிக்கவராக இருக்கிறார்.இந்த பலத்தை மட்டும் இவர் நல்ல வழியில் பயன்படுத்தினால் எவ்வளவு நன்றாக இருக்கும்,” என்றனர். அதற்கு நாயகம்(ஸல்) அவர்கள், ‘தோழர்களே! அவர் தம் பச்சிளங்குழந்தையின் தேவைக்காக சென்று கொண்டிருக்கிறார் என்றால் அது நல்லவழி. பெற்றோர்களின் பணிவிடைக்காக சென்று கொண்டிருக்கிறார் என்றால் அது நல்லவழி. வயது முதிர்ந்த பெற்றோர்களின் பணிவிடைக்காக சென்று கொண்டிருக்கிறார் என்றால் அது சீரியவழி. நெறி கெட்ட வழியிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள சென்று கொண்டிருக்கிறார் என்றால் அதுவும் நல்லவழி. ஆனால், பெருமைக்காகவும், புகழுக்காகவும் சென்று கொண்டிருக்கிறார் என்றால் அது ஷைத்தானின் வழியாகும்,” என்றார்கள். அண்ணலார் சொன்னபடி, நம் பெற்றோருக்கு பணிவிடை செய்ய, இந்த நோன்பு காலத்தில் உறுதியெடுப்போம்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.39
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.28.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !