உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாளை தேரோட்டம்!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாளை தேரோட்டம்!

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் சுவாமி கோவிலில் ஆனித் திருமஞ்சனம் மகோற்சவம், ஜூன் 25ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது. நாளை, காலை 6 மணிக்கு சுவாமி தேரில் எழுந்தருளுகிறார். அதை தொடர்ந்து வடம் பிடித்து தேரோட்டம் நடக்கிறது. 4ம் தேதி அதிகாலை மகா அபிஷேகம், ஆயிரங்கால் மண்டபத்தில் திருவாபரண அலங்காரத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு சிறப்பு பூஜைகள், மதியம் ஆனித் திருமஞ்சன உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !