கம்மாபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா!
ADDED :4112 days ago
கம்மாபுரம்: ஏ.வல்லியம் முத்துமாரியம்மன் கோவில், தீமிதி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் தீமித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கம்மாபுரம் அடுத்த ஏ.வல்லியம் முத்துமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா, கடந்த 17ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா மற்றும் மகாபாரத கதைப் பாட்டு நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு அம்மனுக்கு 108 அபிஷேக ஆராதனை, சந்தன காப்பு அலங்காரம், பகல் 12:00 மணிக்கு அன்னப் படையல் நடந்தன. மாலை 4:30 மணிக்கு நடந்த தீமிதி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் தீமித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். நேற்று மஞ்சள் நீர் உற்சவத்தில் முத்துமாரியம்மன் வீதியுலா வந்து அ ருள்பாலித்தார்.