வேலாயுதம்பாளையம் ஆடிக்கிருத்திகை கோலாகல விழா!
ADDED :4213 days ago
வேலாயுதம்பாளையம்: புகழிமலை பாலசுப்ரமண்ய ஸ்வாமி கோவிலில், ஆடிக்கிருத்திகை விழா கோலாகலமாக நடந்தது. உச்சி கணபதி, பாலசுப்ரமண்ய ஸ்வாமிக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர், சந்தனம், திருநீறு உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மஹா தீபாராதனையும் நடந்தது.ஸ்வாமிக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஆடிக்கிருத்திகை விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர்.