எரிச்சனாம்பாளையம் கோவிலில் பவுர்ணமி விழா!
ADDED :4151 days ago
விழுப்புரம்: எரிச்சனாம்பாளையம் கோவிலில் பவுர்ணமி விழா நடந்தது. விழுப்புரம் அடுத்த எரிச்சனாம்பாளையம் கிராமத்தில் மன்னர்சுவாமி, பச்சைவாழியம்மன், முருகப் பெருமான் வள்ளி, தெய்வானை கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 10ம் தேதி பவுர்ணமி ஊஞ்சல் உற்சவ விழா நடந்தது. இரவு 8 மணிக்கு அபிஷேகமும், 9 மணிக்கு அலங்காரம் மற்றும் தீபாரதனை நடந்தது. தொடர்ந்து 9.30 மணிக்கு சுவாமி வீதியுலா, 11 மணிக்கு சுவாமி பவுர்ணமி ஊஞ்சல் உற்சவமும் நடந்தது. விழா ஏற்பாடுகளை உபயதாரர்கள் முருகவேல், சரவணன், முத்துவேல், வீரப்பன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.