பூளவாடியில் கோகுலாஷ்டமி விழா!
ADDED :4071 days ago
உடுமலை : பூளவாடி கரிவரதராஜ பெருமாள் கோவிலில், கோகுலாஷ்டமி விழா கொண்டாடப்பட்டது.உடுமலை அருகே பூளவாடியில் அமைந்துள்ளது கரிவரதராஜ பெருமாள் கோவில். இக்கோவிலில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு, கடந்த 17 ம்தேதி மதியம் 12.00 மணிக்கு, சுவாமிக்கு அபிேஷகம், அலங்கார பூஜை நடந்தது. மாலை 6.00 மணிக்கு, சுவாமி வீதியுலாவும், இரவு 7.00 மணிக்கு, உரி அடித்தல் நிகழ்ச்சியும் நடந்தன.