நாகப்பட்டினம் கடலில் தங்க மீன் விடும் வைபவம்!
ADDED :4063 days ago
நாகப்பட்டினம்: நாகையில், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராக போற்றப் படும் அதிபத்த நாயனாருக்கு சிவபெருமான், காட்சியளித்த நாளை நினைவு கூறும் வகையில், கடலில் தங்க மீன் விடும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று மதியம் நாகை நீலாயதாட்சி அம்மன் கோவிலில், இடப வாகனத்தில் சிவபெருமான் தேவியருடன் எழுந்தருளினார். புதிய கடற்கரையில் நம்பியார் நகர், ஆரியநாட்டு தெரு, சாமந்தான் பேட்டை கிராம மீனவர்கள் சீர்வரிசையுடன் வரவேற்றனர். புதிய கடற்கரைக்கு இடப வாகனத்தில் வந்த சிவபெருமான் மற்றும் அதிபத்த நாயனாருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. பின் அதிபத்த நாயனார் கட்டுமரத்தில் சென்று கடலில் தங்கமீனை விடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.