உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜலதர மாரியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம்!

ஜலதர மாரியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம்!

விழுப்புரம்: கண்டமானடியில் அமைந்துள்ள  ஜலதர மாரியம்மன் கோவிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. கண்டமானடியில் அமைந்துள்ள   ஜலதர மாரியம்மன் கோவிலில் நேற்று காலை 7:00 மணிக்கு நான்காம் கால யாகபூஜை, கோ பூஜை, நாடி சந்தானம், மகா பூர்ணாஹூதி, தீபாராதனை  நடந்தது. அதனை தொடர்ந்து 10:00 மணிக்கு கலசம் புறப்பாடு, ஜலதர மாரியம்மன், சித்தி விநாயகர், துர்க்கை அம்மன், பாலமுருகன் சுவாமிகளுக்கு  மகா கும்பாபிஷேகம் நடந்தது.  இரவு 10:00 மணிக்கு அம்மன் வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை சுப்ரமணிய சிவச்சாரியார், கணேச குருக்கள்  மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !