பழநியில் கேரளா கவர்னர் சுவாமி தரிசனம்!
ADDED :4067 days ago
பழநி : கேரள மாநில கவர்னர் சதாசிவம் குடும்பத்துடன் பழநி மலைக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். காலை 11 மணிக்கு பழநி கோயில் தங்கும் விடுதிக்கு வந்த கவர்னரை கலெக்டர் வெங்கடாசலம், ஆர்.டி.ஓ., கீதா, தாசில்தார் மாரியப்பன், கோயில் இணை ஆணையர் (பொ) ராஜமாணிக்கம் வரவேற்றனர். பின், மலைக்கோயிலில் தரிசனம் செய்தார்.