உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேணுகோபால சுவாமி கோவிலில் ஊஞ்சல் உற்சவம்!

வேணுகோபால சுவாமி கோவிலில் ஊஞ்சல் உற்சவம்!

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. நெல்லிக்குப்பம் ருக்மணி சத்யபாமா சமேத ÷ வணுகோபால சுவாமி கோவிலில் ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனமும் தீபாராதனையும் நடந்தது. ருக்மணி சத்யபாமா  சமேதராய் வேணுகோபால சுவாமி ஊஞ்சல் உற்சவத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  பூஜைகளை ரமேஷ் பட்டாச்சாரியார் செய் தார். அருள்தரும் ஐயப்பன் கோவிலில் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ஐயப்பன்  பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜைகளை முருகன் குருக்கள் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !