செஞ்சி தாண்டவேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்!
ADDED :3984 days ago
செஞ்சி: மேல்மலையனுõர் ராஜராஜேஸ்வரி சமேத தாண்டவேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடந்தது. தாண்டவேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். மாலை 6 மணிக்கு 21 படி அரிசியில் தயாரித்த அன்னம் மற்றும் காய்கறிகளை கொண்டு அலங்காரம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். விழா ஏற்பாடுகளை பிரதோஷ குழுவினர் செய்தனர்.