உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மெய்கண்டார் கோவிலில் சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பு

மெய்கண்டார் கோவிலில் சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பு

திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் மெய்கண்டார் கோவில் அறவுரை மண்டபத்தில் சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பு நடந்தது. காலை 9:00 மணிக்கு மூலவருக்கு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. காலை 10:00 மணிக்கு விழுப்புரம், கள்ளக்குறிச்சி சைவ சித்தாந்த பயிற்சி மைய மாணவர்களுக்கு பேராசிரியர் சிங்காரவேலன், 8ம் சூத்திரம் குறித்து பயிற்சி அளித்தார். ஏற்பாடுகளை பயிற்சி மைய அமைப்பாளர்கள் தமிழழகன், பாபு, அம்பலவாணத்தம்பிரான் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !