உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோமநாதீஸ்வரர் கோவிலில் கார்த்திகை உற்சவம்

சோமநாதீஸ்வரர் கோவிலில் கார்த்திகை உற்சவம்

பள்ளிப்பட்டு: வெளியகரம் சோமநாதீஸ்வரர் மலைக்கோவிலில், இன்று கார்த்திகை மூன்றாம் திங்களை ஒட்டி, சிறப்பு உற்சவம் நடைபெற உள்ளது. பள்ளிப்பட்டு அடுத்த, வெளியகரம் மலை மீது மரகதவள்ளி உடனுறை சோமநாதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இன்று காலை 10:00 மணிக்கு, மலைக்கோவிலில், மூலவர் சோமநாதீஸ்வரர் மற்றும் மரகதவள்ளி அம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம் நடைபெறுகிறது. மாலை, 6:00 மணிக்கு, 108 நாமாவளியும், மகா தீபாராதனையும் செய்யப்படும். உற்சவத்தை ஒட்டி, காலை முதல், மாலை வரை, கோவில் நடை திறந்திருக்கும். மூன்று மற்றும் நான்காம் திங்கள் கிழமைகளில், மலைக்கோவிலில், திரளான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்ய குவிந்திருப்பது வழக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !