ஐராவதீஸ்வரர் கோயிலில் 108 சங்காபிஷேகம்!
ADDED :4103 days ago
உசிலம்பட்டி : உசிலம்பட்டி அருகே ஆனையூர் ஐராவதீஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடந்தது. 108 சங்குகள் வைத்து சிறப்பு வழிபாடுகள் நடந்தபின் தீர்த்தத்தை வைத்து அபிஷேகம் நடத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது. பிரதோஷ கமிட்டி தலைவர் ராஜாங்கம் தலைமையில் பூஜைகளை சிவாச்சாரியார்கள் கண்ணன் என்ற பாசுராமன், விவேக்சிவம் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.