உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்மபுரி வட்டாரத்தில் வைகுண்ட ஏகாதசி!

தர்மபுரி வட்டாரத்தில் வைகுண்ட ஏகாதசி!

காரிமங்கலம்: காரிமங்கலம், அக்ரஹாரம் ஸ்ரீ லட்சுமி நாராயணா ஸ்வாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சொர்க்கவாசல் திறப்பு விழா வரும், 1ம் தேதி நடக்கிறது. இதையொட்டி அதிகாலை, 3.30 மணிக்கு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு விழா நடக்கிறது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. வரும், 2ம் தேதி துவாதசி சிறப்பு பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் எம்.எல்.ஏ., அன்பழகன், குருக்கள் மோகன்குமார், முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் செந்தில்குமார், சீனிவாசன், கட்டளைதாரர் டாக்டர் பன்னகசைனம் ஆகியோர் செய்துள்ளனர்.

* தர்மபுரி கோட்டை, ஸ்ரீ பரவாசுதேவர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை, 3.30 மணிக்கு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள், அலங்காரம் நடக்கிறது. 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு விழா நடக்கிறது. அதிகாலை முதல் மாலை வரை பக்தர்களுக்கு ஸ்ரீ வாரி சேவா டிரஸ்ட் சார்பில், பிரசாதம் வழங்கப்படுகிறது. 2ம் தேதி துவாதசியை முன்னிட்டு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடக்கிறது.

* தர்மபுரி கடைவீதி, பிரசன்ன வெங்கட்டரமண ஸ்வாமி கோவில், பிக்கனஅள்ளி சென்னகேசவ பெருமாள் கோவில், ஆட்டுகாரம்பட்டி ராதேகிருஷ்ணர் கோவில், கோவிலூர் சென்னகேசவ பெருமாள் கோவில் உட்பட பல்வேறு கோவில்களில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகளும், சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !