உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்றத்து சுவாமிகளுக்கு வெள்ளிக் கவசம்!

குன்றத்து சுவாமிகளுக்கு வெள்ளிக் கவசம்!

திருப்பரங்குன்றம்: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நாளை(ஜன.,1) திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாளுக்கு வெள்ளிக் கவசம் சாத்துப்படியாகிறது. மாலை 5 மணிக்கு கார்த்திகை விழாவும், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பும் நடக்கிறது. திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் காலை 4.30 மணிக்கு ஸ்ரீனிவாச பெருமாள் விஸ்வரூப தரிசனம், காலை 5 மணிக்கு பெருமாள் புறப்பாடும், சொர்க்கவாசல் திறப்பு, காலை 7 மணிக்கு குபேரலட்சுமி பூஜை நடக்கிறது. மூலவர்கள் சித்தி விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, குருவாயூரப்பன்,மீனாட்சி சுந்தரேஸ்வரர், துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி, தட்சிணா மூர்த்திக்கு சந்தனக்காப்பு சாத்துப்படியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !