உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்மலையனூர் அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவம்!

மேல்மலையனூர் அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவம்!

https://imgtemple.dinamalar.com/kovilimages/news/TN_39104_15022588.jpgமேல்மலையனூர் அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவம்!,https://imgtemple.dinamalar.com/kovilimages/news/TN_39104_150234407.jpgமேல்மலையனூர் அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவம்!செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு நடந்த தை அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் கொட்டும் பணியிலும் லட்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு தை அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தங்க கவசம் அணிவித்தனர். இரவு 12 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். ஊஞ்சல் மண்டபத்தை திராட்சை தோட்டமாக அலங்கரித்திருந்தனர். இரவு 1 மணிவரை ஊஞ்சல் தாலாட்டு நடந்தது. கோவில் பூசாரிகளும், பக்தர்களும் பக்தி பாடல்களையும், தாலாட்டு பாடல்களையும் பாடினர். இந்து சமாய அறநிலையத்துறை உதவி ஆணையர்  பிரகாஷ்,  அறங்காவலர் தலைவர் வடிவேல் மற்றும் அறங்காவலர்கள், மேலாளர்கள் முனியப்பன், மணி உட்பட பலர் கலந்து கொண்டனர். செஞ்சி டி.எஸ்.பி., முரளிதரன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்கினர். கொட்டும் பணியையும் பொருட்படுத்தாமல் லட்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !