உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யோகி ராம் சுரத்குமார் மகராஜ்14ம் ஆண்டு ஆராதனை விழா!

யோகி ராம் சுரத்குமார் மகராஜ்14ம் ஆண்டு ஆராதனை விழா!

திருக்கோவிலுார்:திருவண்ணாமலை, பகவான் யோகி ராம் சுரத்குமார் மகராஜின், 14ம் ஆண்டு
ஆராதனை விழா, வரும், 14ம் தேதி துவங்கி இரண்டு நாட்கள் நடக்கிறது.

முதல் நாள் காலை, 6:30 மணிக்கு ஹோமங்கள் மற்றும் அதிஷ்டானத்தில் அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடக்கிறது.இரண்டாம் நாள், 15ம் தேதி காலை, 6:30 மணிக்கு மகன்யாசம் மற்றும் அதிஷ்டானத்தில் மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடக்கிறது.காலை, 9:00 மணிக்கு நித்யானந்தகிரி சுவாமி முன்னிலையில் தீர்த்தநாராயண பூஜை, 11:00 மணிக்கு பக்தர்களின் பஜனை, இரவு, 8:00 மணிக்கு பகவான் உற்சவ மூர்த்தியுடன் வெள்ளி ரதத்தில் ஊர்வலம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, நீதிபதி அருணாசலம் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !