மாரியம்மன் கோயில் வருஷாபிஷேகம்!
ADDED :4061 days ago
மதுரை: மதுரை சிந்தாமணி அண்ணாதெரு, வேளுக்குடி சீதளாமகா மாரியம்மன் கோயிலில்
வருஷாபிஷேகம் நடந்தது.கணபதி யாகம், பூர்ணாகுதி பூஜைகள் நடந்தன. விநாயகர், முருகன்,
அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரத்தில் காட்சிஅளித்தனர். சுப்ரமணிய சிவம் குருக்கள் யாகவேள்வி பூஜைகள் செய்தார். அருணாசலம், மனோகரன், ரவி, சரவணன் ஏற்பாடுகளை செய்தனர்.