ராமேஸ்வரத்தில் உலக அமைதிக்காக 72 மணி நேர ஆன்மிக பஜனை!
ராமேஸ்வரம்: உலக அமைதிக்காக, ராமேஸ்வரத்தில் தொடர்ந்து 72 மணி நேரம் ஆன்மிக பஜனை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. உலக அமைதிக்காவும், இந்திய கலாசாரம், பண்பாடு மக்களிடம் வளரவும், வயதான பெற்றோர்களை பாதுகாத்து புண்ணிய தலங்களுக்கு அழைத்து செல்லவும், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கிடவும் வலியுறுத்தி சென்னை பகவான் நாம பிரசார மண்டலி சார்பில் இன்று (பிப்.,4) ராமேஸ்வரம் கோசுவாமி மடத்தில் ஒரு லட்சத்து 8 ஆயிரம் ருத்ராட்சங்களால் உருவான மாலையில் அலங்கரிக்கப்பட்ட சிவலிங்கம் முன் சச்சிதானந்தா தீர்த்த சுவாமி, 121 வேத விற்பன்னர்கள் முன்னிலையில் மகா ருத்ரா பூஜை நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து பிப்., 5 முதல் 7 வரை கோதண்டராம சுவாமி, ஸ்ரீ நிவாச பாகவதர், ஐயாராமன் பாகவதர், ஞானகுரு பாகவதர், நரசிம்மன் பாகவதர் ஆகியோரது ஆன்மிக பஜனை பாடல்கள் தொடர்ந்து 72 மணி நேரம் ஒலிக்கும். இதில் தமிழ்நாடு, டில்லி, மும்பை, கர்நாடகாவை சேர்ந்த ஆயிரத்துக்கு மேலான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர்.