உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலம் பகுதியில் பிரதோஷ வழிபாடு!

மயிலம் பகுதியில் பிரதோஷ வழிபாடு!

மயிலம்: மயிலம் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. கொல்லியங்குணம் சிவன் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஆலகிராம எமதண்டீஸ்வரர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள், தீபாராதனை வழிபாடுகள் நடந்தது. விழா ஏற்பாடுகளை சுந்தரமூர்த்தி குருக்கள் செய்திருந்தார். மயிலம் சுந்தர விநாயகர், வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் கோவிலில் சுவாமிக்கு வழிபாடுகள் நடந்தது. கொல்லியங்குணம், பெரும்பாக்கம், பாதிராபுலியூர் சிவன் கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !