லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் சஹஸ்ரநாம அர்ச்சனை!
ADDED :4124 days ago
புதுச்சேரி: லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில், பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கான சஹஸ்ரநாம அர்ச்சனை நேற்று துவங்கியது. முத்தியால் பேட்டை ராமகிருஷ்ணா நகர் லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில், 12ம் ஆண்டு சஹஸ்ரநாம அர்ச்சனை நேற்று துவங்கியது. இதில், பொதுத் தேர்வு எழுத உள்ள பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள், தங்களது பெற்றோருடன் பங்கேற்றனர். தொடர்ந்து 108 நாட்களுக்கு சஹஸ்ரநாம அர்ச்சனை நடக்கிறது. பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் இதில் பங்கேற்கலாம். பொதுத் தேர்வு நாட்களில் காலை 10.30 மணிக்கு மாணவர்களின் பெயர், நட்சத்திரம், ராசி ஆகியவற்றை பதிவு செய்து பெற்றோர்களும் சங்கல்பத்தில் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு 90954–28302 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.