திருமலை தெப்பத்தில் ருக்மணியுடன் வலம்வந்த கிருஷ்ணர்!
ADDED :3929 days ago
திருமலையில் நடந்துவரும் தெப்பத்திருவிழாவின் இரண்டாம் நாளன்று கிருஷ்ணர்–ருக்மணி சமேதரராய் தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாதஸ்வர மேளம் முழங்க தெப்பத்தில் வலம்வந்த சுவாமியை பக்தர்கள் படிக்கட்டுகளில் இருந்தபடி தரிசித்தனர்.திருவிழா மொத்தம் ஐந்து நாள் நடக்கிறது ஐந்தாம் நாள் பவுர்ணமி ஔியில் தெப்பத்தில் மலையப்பசுவாமி வலம்வருகிறார்.