உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருப்பராயன் கோவிலில் குண்டம் விழா

கருப்பராயன் கோவிலில் குண்டம் விழா

பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த தேவம்பாடி காளிபாளையம் கருப்பராயன் கோவிலில் இன்று குண்டம் திருவிழா நடைபெறுகிறது. தேவம்பாடி காளிபாளையத்தில் அமைந்துள்ள மந்தக்காட்டு கருப்பராயன், காளியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் பள்ளயம் விழா நடைபெறும். இதையொட்டி குண்டம் எனும் தீ மிதிக்கும் சடங்கு நடந்து வருகிறது.அதையொட்டி, இன்று 30ம் ஆண்டு பள்ளயமும், 9ம் ஆண்டு குண்டம் திருவிழாவும் நடைபெற உள்ளது. இதற்காக நேற்று மாலை, 5:00 மணிக்கு மேல் பெரிய கருப்பராயன் கோவிலில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டது.தொடர்ந்து இன்று காலை, 7:00 மணிக்கு மேல் கணபதி ேஹாமம் புண்ணியாவாசனை நடைபெறுகிறது. காலை, 8:00 மணிக்கு குண்டம் திறப்பு, 9:00 மணிக்கு பூ வளர்த்தல், 12:00 மணிக்கு பள்ளைய பூஜை, மதியம் 12:30 மணிக்கு கங்கை செல்லுதல்,மாலை 4:00 மணிக்கு குண்டம் இறங்குதல் நடைபெறும். நிறைவாக மாலை 6:00 மணிக்கு மேல் அக்னி தணிப்பு, அபிேஷக பூஜை, அருள் வாக்கு கூறுதல் நடைபெறும். மேலும், காலை, 8:00 மணி முதல் அன்னதானம் நடைபெறும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !