புஷ்ப அலங்காரத்தில் பஞ்சமூர்த்திகள் அருள்பாலிப்பு!
ADDED :3828 days ago
விருத்தாசலம்: விடையாற்றி உற்சவத்தையொட்டி, புஷ்ப அலங்காரத்தில் பஞ்சமூர்த்திகள் அருள்பாலித்தனர். விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ÷ காவில் மாசிமக பிரம்மோற்சவம், கடந்த மாதம் 23ம் தேதி துவங்கி, 6ம் தேதி நிறைவடைந்தது. தொடர்ந்து, 10 நாள் விடையாற்றி உற்சவம் நடந்து வருகிறது. அதில், 6ம் நாள் உற்சவமாக பழங்கள், காய்கறிகளால் பஞ்சமூர்த்திகள் அருள்பாலித்தனர். நேற்று முன்தினம் 7ம் நாள் உற்சவத்தையெ õட்டி, விநாயகர், முருகர், விருத்தகிரீஸ்வரர், தாயார், சண்டிகேஸ்வரர் சுவாமிகளுக்கு நுõற்றுக்கால் மண்டபத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந் தது. புஷ்ப அலங்காரத்தில் பஞ்சமூர்த்திகள் அருள்பாலித்தனர். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.