விருதுநகர் மாரியம்மன் கோயில் திருவிழா தொடக்கம்!
ADDED :3844 days ago
விருதுநகர் : விருதுநகரில் பிரசித்தபெற்ற பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. மாலை கும்ப பூஜை, யாக பூஜையுடன் தொடங்கிய விழாவில் இரவு 8.01 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து அம்பாள் நகர் வலம் வந்தார். நாளை இரவு 10 மணிக்கு புஷ்ப பல்லக்கில் அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா ஏப்.,5ல் நடக்கிறது. அன்றிரவு அடுப்பு பூஜை, பராசக்தி தங்க குதிரை வாகனத்தில் நகர் வலம் வருதல் நடக்கிறது. ஏப்.,6ல் கயிறு குத்து, அக்னி சட்டி ஏந்துதல், கரகம் எடுத்தல், ரதம் இழுத்தல், வேடங்கள் புனைந்து நேர்த்தி கடன் நிறைவேற்றுதல், ஏப்.,8ல் தேரோட்டம் நடக்கிறது. ஏராளமானோர் பங்கேற்பர். ஏற்பாடுகளை விருதுநகர் இந்து நாடார்கள் தேவஸ்தான நிர்வாகிகள் செய்துள்ளனர்.