கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பதன் பொருள் என்ன?
ADDED :3929 days ago
கோபுரம் பாத யுகளம் (கடவுளின் திருவடி) என்கிறது ஆகமம். கடவுளின் திருவடியை அடையும் வகையில், மனிதன் தனது செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற அரிய தத்துவத்தை வலியுறுத்துகிறது. இதனால் தான் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும்படியாக கோபுரத்தை உயரமாக அமைத்தார்கள்.