வக்ரகாளியம்மன் கோவிலில் தெப்பல் உற்சவம்
ADDED :3828 days ago
திருக்கனுார்: திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டை யொட்டி தெப்பல் உற்சவம் நடந்தது. திருக்கனுார் அடுத்த தமிழகப்பகுதியான திருவக்கரையில் உள்ள சந்திரமவுலீஸ்வரர் கோவிலில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வக்ரகாளியம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடந்தது. வக்ரகாளியம்மன், சந்திரமவுலீஸ்வரர், பெருமாள் சுவாமி களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.மாலை 6:00 மணிக்கு கோவில் குளத்தில் வக்ரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் தெப்ப உற்சவம் நடந்தது. இரவு 8:00 மணிக்கு மின் அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. கோவில் வளாகத்தில் சமய சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை உதவி ஆணையர் பிரகாஷ், செயல் அலுவலர் பாலசுப்ரமணியராஜன், மேலாளர் ரவி உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.