ஆகமமும் புராணமும்
ADDED :3910 days ago
பாரமேச் சுரம்இருப தாறிலக் கஞ்சொலும்
பயிலுமொரு கிரண மதுவும்
பஞ்சகோ டியதாமி லக்கம்வா துளமெனப்
பகர்ந்தனைபல் புவனம் உய்யச்
சீருலவு பதினெண்பு ராணமதில் ஈரைந்து
சிவபுரா ணம்ப வுடிகம்
செப்பிய இலிங்கமார்க் கண்டம்வா மனமுடன்
திருமச்சம் உயர்வ ராகம்
பேருதவு சைவமுயர் கூர்மமே காந்தமொடு
பிரமாண்டம் எனவு ரைத்தாய்
பெரியமால் காதையது நாரதம் வயிணவம்
பீடுதரு பாக வதமே
சேரணிகொள் காருடபு ராணமிந் நான்கெனச்
செய்யமுனி வர்க்க மைத்தாய்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.