மரகத சாய்பாபா 4ம் ஆண்டு தரிசன நாள்!
ADDED :3934 days ago
சென்னை: மேற்கு மாம்பலம், ஸ்டேஷன் ரோடு, ரயில்வே பார்டர் அருகே, பாபு ராஜேந்திர பிரசாத் இரண்டாவது தெருவில் உள்ள மரகத சாய் தரிசன மையத்தில், மரகத சாயிபாபா நான்காம் ஆண்டு தரிசன நாள் விழா, நாளை (மே 13) நடக்கிறது.
சாய்பாபா அஷ்டோத்திர பூஜையுடன் பாராயண நிகழ்ச்சி, நாளை காலை,7:00 மணிக்கு
துவங்குகிறது. அன்று இரவு, 7:30மணிக்கு சிறப்பு பஜனை மற்றும் ஆரத்தியுடன் நிறைவு பெறும்.