தேர்த்திருவிழா!
ADDED :3804 days ago
புதுச்சேரி: உலக முத்து மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நடந்தது. புதுச்சேரி கோவிந்தசாமி பாரதிபுரத்தில் உள்ள உலக முத்து மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 6ம் தேதி துவங்கியது.
தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பம்பை உடுக்கையுடன் அம்மனை பற்றிய வர்ணனை, இரவு பல்வேறு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. தேரோட்டம் நேற்று முன் தினம் நடந்தது. தேரில் அம்மன் எழுந்தருள. நகரில் வீதியலாவாக தேர் இழுத்து வரப்பட்டது.ஏற்பாடுகளை அறங்காவல் குழுவினர் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் செய்திருந்தனர்.