உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விஜயமாநகரம் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா!

விஜயமாநகரம் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா!

மங்கலம்பேட்டை: விஜயமாநகரம் திரவுபதியம்மன் கோவிலில் இன்று தீ மிதி திருவிழா நடக்கிறது. மங்கலம்பேட்டை அடுத்த விஜயமாநகரம்  திரவுபதியம்மன் கோவில் தீ மிதி திருவிழா கடந்த 28ம் தேதி துவங்கியது. தினசரி காலை 8:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை,  இரவு 9:00 மணிக்கு அலங்கரித்த வாகனத்தில் அம்மன் வீதியுலா வந்து அருள்பாலித்தார். இன்று (15ம் தேதி) காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக  ஆராதனை, மாலை 5:00 மணிக்கு கோவில் வாசலில் அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.  தொடர்ந்து, சுவாமி வீதியுலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !