உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அய்யாவாடியில் நிகும்பலா யாகம்: திரளான பக்தர்கள் தரிசனம்!

அய்யாவாடியில் நிகும்பலா யாகம்: திரளான பக்தர்கள் தரிசனம்!

மயிலாடுதுறை: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த அய்யாவாடியில் ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோயில் உள்ளது. இங்கு ராவணன் மகன் மேகநாதனும், பஞ்ச பாண்டவர்களும் பூஜித்து வேண்டிய  வரங்களை பெற்றுள்ளனர். இந்த கோயிலில் அம்மாவாசை தோறும் மிளகாய் வற்றல் கொண்டு நடத்தப்படும் நிகு ம்பலா யாகம் சிறப்பு வாய்ந்தது.இந்த நிகும்பலா யாகத்தில் கலந்துகொண்டு அம்பாளை தரனடைந்தா ல் சத்ரு உபாதைகள் நீங்கி சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.வைகாசி மாத அம்மாவாசை யான நேற்று காலை அம்பாளுக்கு அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து அம்பாளை கோ யில் மண்டபத்தில் எழுந்தருள செய்து ஜபம் மற்றும் நிகும்பலா யாகம் நடைபெற்றது.யாகத்தை பாண் டூர் சதாசிவம் தலைமையில் 13 குருக்கள்கள் நடத்தினர். மதியம் 1 மணிக்கு தண்டபாணி குருக்கள் மிள காய் வற்றல் கொட்டி நிகும்பலா யாகத்தை பூர்த்தி செய்தார். யாகத்திற்கான ஏற்பாடுகளை சங்கர் குருக் கள் செய்திருந்தார். யாகத்தில் பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ.துரைக்கண்ணு உள்ளிட்ட திரளான பக்த ர்கள் கலந்துகொண்டு அம்பாளை தரிசித்தனர். கும்பகோனத்தில் இருந்து அய்யாவாடிக்கு சிறப்பு பஸ் கள் இயக்கப்பட்டன. நாச்சியா ர்கோயில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிரு ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !