உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சி.மெய்யூர் அங்களாம்மன் கோவில் கும்பாபிஷேகம்!

சி.மெய்யூர் அங்களாம்மன் கோவில் கும்பாபிஷேகம்!

திருவெண்ணெய்நல்லூர்: சி.மெய்யூர் அங்களாம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. திருவெண்ணெய்நல்லூர் அடுத்த சி.மெய்யூர் அங்காளம்மன் கோவிலில், நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.  கடந்த 29ம் தேதி காலை 7:00 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள்   துவங்கியது. 30ம் தேதி காலை 8:00 மணிக்கு, இரண்டாம்கால யாகசாலை பூஜை, இரவு 10:00 மணிக்கு மூன்றாம் கால பூஜையும் நடந்தது. இதனை   தொடர்ந்து நேற்று காலை 6:30 மணிக்கு நான்காம் கால யாகபூஜையும், 9:00 மணிக்கு மகாபூர்ணாஹூதி மற்றும் தீபாராதனையும் நடந்தது. காலை 9:30 மணிக்கு கடங்கள் புறப்பாடாகி அங்காளம்மன், கொடிமரம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. சிவாச்சாரியார்  கள் புனித நீர் ஊற்றினர்.  பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சர்வசாதகத்தை ஞானசம்மந்த சிவாச்சாரியார் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !